ஐக்கிய அமெரிக்க சிவில் சேவை

ஐக்கிய அமெரிக்கா பிரித்தானிய காலனித்துவத்துக்குட்பட்டிருந்த ஒரு நாடாகும். ஐக்கிய அமெரிக்காவின் சிவில் சேவையானது ஆரம்பத்தில் பிரித்தானிய மாதிரியைப் போன்றதாகவே காணப்பட்டிருந்தது. இவர்கள் முடிக்குரிய அரச ஊழியர்களாக மதிக்கப்பட்டதுடன், அரசின் தனி உரிமைகளை அனுபவிப்பவர்களாகவும் இருந்தனர். அமெரிக்கப்புரட்சியின் பின்னர் அரசியல் முறைமையில் ஏற்பட்ட Continue Reading →

இந்திய சிவில் சேவை

பிரித்தானிய கிழக்கிந்தியக் கம்பனிகள் இந்தியாவை நிர்வகிக்க தொடங்கிய காலத்தில் இருந்தே இந்தியாவில் சிவில் சேவை என்பது ஆரம்பமாயிற்று. ஆரம்பத்தில் கிழக்கிந்தியக் கம்பனி 1600 முதனிலை வர்த்தக அமைப்புக்களைத் தோற்றுவித்தது. இவ்வமைப்புக்களின் நிர்வாகப் பொறுப்புக்களைக் கொண்டமைந்ததுடன், அதற்கான அதிகாரங்களையும் கொண்டிருந்தன. இவ்வமைப்புகளின் உயர்நிலைப் Continue Reading →

இலங்கையின் சிவில் நிர்வாகம்

1796ஆம் ஆண்டு பிரித்தானியக் காலனித்துவத்திற்குள் இலங்கை கொண்டு வரப்பட்டு, 1802ஆம் ஆண்டு முடிக்குரிய காலனியாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதுவரையில் கிழக்கிந்திய வர்த்தகக் கம்பனியின் நிர்வாகத்தின் கீழ் இலங்கை நிர்வகிக்கப்பட்டது. 1815ஆம் ஆண்டு கண்டி இராச்சியம் பிரித்தானியர்களால் கைப்பற்றப்படுவதோடு இலங்கை முழுவதும் காலனித்துவத்தின் கட்டுப்பாட்டிற்குள் Continue Reading →

ஓம்புட்ஸ்மன் (குறைகேள் அதிகாரி)

இன்றைய அரசாங்கங்களின் நிர்வாகக் கடமைகள் அதிகரித்து வருகின்றன. பொது நிர்வாகமானது மக்களின் அநேக தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டிய பொறுப்புடனும், நிர்வாகக் கடமைகள், செயற்பாடுகள் தொடர்பாக மக்களுக்குப் பொறுப்பு கூற வேண்டிய நிலையிலும் உள்ளது. நவீன உலகில் மக்களுக்கான நலன்புரி நடவடிக்கைகளை Continue Reading →

அரசுடன் தொடர்புடைய எண்ணக்கருக்கள்

அரசு என்பது அரசியலமைப்புடைய சமுதாயமாகும். நிலப்பரப்பு, மக்கள் தொகை, அரசாங்கம்,இறைமை ஆகியன அரசிற்கு அவசியமானதாகும். இது பற்றிக் கார்ணர் கூறும் போது “எண்ணிக்கையில் அதிகமாகவோ, குறைவாகவோ உள்ள மக்கள் சமுதாயமாகும். இது வெளிக்கட்டுப்பாட்டிலிருந்து விடுபட்டு சுதந்திரம், குறிப்பிட்ட நிரந்தரமான குறிப்பிட்ட நிலப்பரப்பு, Continue Reading →

அரசாங்கத்தின் வகைப்பாடுகள்

அரசியல் சிந்தனையாளர்கள் கோட்பாட்டாளர்கள் ஆகியோர்களால் அரசியல் முறைமைகள் தொடர்பாக வியாக்கியானம் பல கொடுக்கப்பட்டுள்ளன. புராதன காலத்தில்பிளேட்டோ (Plato) அரிஸ்ரோட்டில் (Aristotle) பொலிபியஸ் (Polybius) இம்முயற்சியில் ஈடுபட்டிருந்தார்கள். ஆயினும் கிரேக்க காலத்தில் அரசு அரசாங்கம் என்பவற்றிற்கு இடையில் வேறுபாட்டினை வெளிப்படுத்தக் கூடிய வியாக்கியானங்களை இவர்களால் முன்வைக்க முடியவில்லை. இவர்கள் தமது பணிகளை Continue Reading →

தந்தை வழி, தாய்வழிக் கோட்பாடு

இக்கோட்பாட்டினை முதன்மைப்படுத்தியவர் 1822 ஆம் ஆண்டிற்கும் 1888ஆம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் வாழ்ந்த சேர் ஹென்றி மெயின் (Sir Henry Maine) ஆவார். இவர் 1861 ஆம் ஆண்டு எழுதிய புராதனச் சட்டம் (Ancient Law) என்னும் நூலிலும், 1875 ஆம் Continue Reading →

வரலாற்று அல்லது படிமுறை வளர்ச்சிக் கோட்பாடு

படிமுறை வளர்ச்சிக் கோட்பாடு இரு விடயங்களை முதன்மைப்படுத்துகின்றது. ஒன்று அரசு உருவாக்கப்படுவதில்லை. பதிலாக அரசு வளருகின்றது.அரசு வளர்கின்றது அல்லது படிப்படியாக வளர்கின்றது என்ற கருத்து, பல்லாயிரக்கணக்கான வருட வளர்ச்சியினை கொண்டது அரசு என்பதனை குறிக்கப் பயன்படுத்தப்படுகின்றது.இரண்டாவது பல காரணிகள் அரச கட்டுமானத்தினை Continue Reading →

அரசு பற்றிய பலக்கோட்பாடு

தெய்வீக உரிமைக் கோட்பாட்டினை விட பலவந்தக் கோட்பாடு உயர்வாகக் கருதப்படுகின்றது. உடல் வலிமையினை அடிப்படையாகக் கொண்டு அரசு தோற்றம் பெற்றது என பலக் கோட்பாடு கூறுகி;ன்றது. வரலாற்று ரீதியாக இக் கோட்பாட்டின் தோற்றம் ஆக்கிரமிப்பிலிருந்து ஆரம்பமாகியது. பலவீனமான அரசன் பலமான அரசனால் Continue Reading →

மாக்ஸ்சிசக் கோட்பாடு

கால்மாக்ஸ், பிரட்றிக் ஏங்கல்ஸ் ஆகிய இருவரும் கோட்பாடு, அரசியல் நடைமுறை ஆகிய இரண்டிற்குமிடையில் இணைப்பினை ஏற்படுத்திய முதன்நிலைக் கோட்பாட்டாளர்களாகும். இவர்கள் இருவரும் விஞ்ஞானபூர்வமானதும், புரட்சிகர மானதுமாகிய சோசலிசக்கோட்பாட்டை முன்வைத்தார்கள். கால்மாக்ஸ் 1848 ஆம் ஆண்டு வெளியிட்ட தனது “கம்யூனிச அறிக்கையிலும்”, “மூலதனம்” Continue Reading →