பாராளுமன்ற அரசாங்க முறைமை

ஜனநாயக அரசாங்கங்களைப் பொதுவாக பாராளுமன்ற அரசாங்க முறைமை, ஜனாதிபதி அரசாங்க முறைமை என இரண்டாக வகைப்படுத்தலாம். இவ்வகைப்பாடானது சட்ட சபைக்கும், நிர்வாகத் துறைக்கும் இடையிலான உறவின் அடிப்படையிலேயே மேற்கொள்ளப்படுகின்றது. சட்டத்துறையும், நிர்வாகத்துறையும் கூட்டாக மக்களுக்கு பொறுப்புக் கூறக்கூடிய ஓர் அரசாங்க முறையாக Continue Reading →

அரசியல் நவீனத்துவம்

அரசியல் நவீனத்துவம் என்ற பதமானது அரசியல் கலாசாரத்தில் ஏற்படும் மாற்றத்தினை குறித்து நிற்கின்றது. அரசியல் கலாசாரத்தில் ஏற்படும் மாற்றமானது சமூக, பௌதீக, சூழலால் தீர்மானிக்கப்படுகின்றது. எஸ்.பி.ஹன்ரிங்ரன் அரசியல் நவீனத்துவத்தை வரைவிலக்கணப்படுத்தும் போது மனிதனின் சிந்தனை, செயற்பாடு, அனைத்திலும் ஏற்படும் மாற்றத்துடன் தொடர்புடைய Continue Reading →

அரசியல் கலாசாரம்

அரசியல் கலாசாரம் என்ற எண்ணக்கரு சமூகவியல் நோக்கில் அரசியல் அபிவிருத்தியை இலக்காகக் கொண்டு ஆய்வுக்குட்படுத்தப்படுகின்றது. மக்களின் சமூக நம்பிக்கைகள், விழுமியங்கள் , மனப்பாங்கு என்பவற்றினால் தொகுக்கப்பட்டதே அரசியல் கலாசாரமாகும். அரசியல் முறைமையில் அங்கம் பெறும் ‘தனி மனிதர்களுடைய மனப்பாங்குகள் அரசியலாக முன்னெடுத்துச் Continue Reading →

அரசியல் அபிவிருத்தி

பத்தொன்பதாம் நூற்றாண்டில் தோற்றம் பெற்ற சமூகவியல் கோட்பாடுகளில் அரசியல் அபிவிருத்திக் கோட்பாடும் ஒன்றாகும். மக்ஸ் வெபர், கால் மாக்ஸ், எமில் டொர்கையும், கென்றி மெயின் போன்ற சமூகவியல் கோட்பாட்டாளர்கள், மேற்குத்தேச சமூகம் கைத்தொழிற் புரட்சியினால் எவ்வாறு மாற்றத்திற்குள்ளாகியது என்பதை விளக்ககுகின்றார்கள். 1950, Continue Reading →

அரசியல் சமூகமயமாதல்

மனிதன் ஒரு சமூகப் பிராணி என்று கூறிய அரிஸ்ரோட்டில் மனித இயல்பில் முக்கியமானது சோ்ந்து வாழ்தல் எனக் கூறுகின்றார். மனிதன் பிறந்ததிலிருந்து ஏனைய மனிதர்களின் அன்பிலும் அரவனைப்பிலும் வாழவே விரும்புகின்றான். அதேபோன்று குடும்பம், கிராமம் என்று சோ்ந்து வாழ்வதையும் விரும்புகின்றான். எனவே Continue Reading →

சமஷ்டிவாதம்

அரசியல் முறைமையில் ‘சமஷ்டிவாதம்’ என்ற பதம் அரசியல் அதிகாரங்கள் முழு நாட்டிலும் எவ்வாறு பங்கீடு செய்யப்படுகின்றன என்பதைப் பொறுத்து விளக்கமளிக்கப்படுகின்றது. அதாவது மத்திய அரசாங்கத்திற்கும், மாநில அல்லது பிராந்திய அரசாங்கத்திற்கும் இடையிலான அதிகாரங்கள் எவ்வாறு பங்கீடு செய்யப்படுகின்றன, எவ்வாறு நடைமுறைப் படுத்தப்படுகின்றன Continue Reading →

யாப்பியல்வாதம்

யாப்பியல்வாதம் பற்றிய கற்கையானது ஒப்பீட்டரசியலில் முக்கியமான இடத்தினைப் பிடித்துள்ளது. டைசி என்பவர் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அரசின் இறைமை அதிகாரத்தினை பயிற்றுவிப்பது யாப்பு ஆகும்’ எனக் கூறுகின்றார். அரசறிவியலாளர்கள் அரசின் தோற்றம், அபிவிருத்தி, இயல்பு, ஒழுங்கமைப்பு, நோக்கம், செயற்பாடுகள் என்பவற்றை விளங்கிக் Continue Reading →

பூகோளமயமாக்கம்

அறிமுகம் பூகோளமயமாக்கம் (Globalizion) என்னும் பதமானது அரசியல், சமூக, பொருளாதார, கலாசார, பண்பாட்டம்சங்களில் பெரிதும் செல்வாக்குச் செலுத்துகின்றன. பூகோளமயமாக்கம் என்ற எண்ணக்கருவானது எப்போது தோற்றம் பெற்றது என்பது தொடர்பாக வேறுபட்ட கருத்துகள் வேறுபட்ட பிரிவினர்களிடம் காணப்படுகின்றன. பூகோளமயமாக்கம் என்ற எண்ணக்கரு கல்வித் துறைக்கான Continue Reading →

இறைமை

அரசியல் விஞ்ஞானத்திலும்,அரசு என்ற நிறுவனத்திலும் மிகவும் அடிப்படையான ஒரு எண்ணக்கருவாக இறைமை கருதப்படுகின்றது. ஆயினும் இதன் பண்புகளைத் தெளிவாக்குவதிலும் வரையறை செய்வதிலும் சிக்கல்களும் கருத்து முரண்பாடுகளும் காணப்படுகின்றன. இறைமை என்ற பதம் பிரான்சிய சொல்லாகிய சவறினேற் (Soverainete) என்பதிலிருந்தும், இலத்தீன் சொல்லாகிய சுப்ரிமிஸ்ரஸ் (Supremitas) என்பதிலிருந்தும் Continue Reading →

அறிமுகம்

 கருத்து பொதுநிர்வாகவியல் இன்று ஆராட்சிக்குரிய ஒரு துறையாக வளர்ந்துள்ளது. பொதுநிர்வாகம் என்பது மக்களைக் கவனித்துக் கொள்கின்ற அல்லது மக்களுடன் தொடர்புள்ள அனைத்து விவகாரங்களையும், செயற்பாடுகளையும் குறித்து நிற்கின்றது.’பொது நிர்வாகம்’ என்ற பதம் ‘Public Administration’ என்ற ஆங்கிலப் பதத்திலிருந்து பெறப்பட்டதாகும். ‘Public’ என்ற பதமானது அரசு ஒன்றின் Continue Reading →